உலகப் பொதுமறை என்பது...

உலகப் பொதுமறை என்பது உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான, அனைவரும் follow பண்ண கூடிய/பண்ண வேன்டிய மறைகள்( or வழிகள்) அதுல இருக்கு அவ்ளோதான்.. அதுக்காக எல்லாரும் அத follow பண்றாங்கன்னு நம்பினா அது நம்ம அறியாமை. கீதை, பைபிள் ,குர்-ஆன் எல்லாம் ஏதாவது ஒரு மதத்தின் ஆதரவோடதான் இவ்ளோ reach ஆச்சு. ஆனா நம் திருக்குறள் அந்த எல்லா ஒழுக்கத்தையும் சொன்னாலும் எந்த மதத்தையும் நம்பி இருக்கல, அதான் problem. நமக்கே govt. பஸ்ல எழுதி, school bookla சேர்த்து, bus ticketla கூட எழுதி, govt. officela எல்லாம் எழுதி வச்சனாலதான் இவ்வளவாவது தெரியுது. யாராவது திருக்குறள் பத்தி பேசினா "ஏன் இந்த ஆளு எப்போ பாத்தாலும் இதையே example காட்டுறார்?" னு கடுப்படிக்கிறோம் :(

இவங்க இவ்வளவு போராடி விளக்கம் சொன்னதே இவங்க தமிழ் மீடியம் ல படிச்சனாலதான் இருக்கும், மத்தவங்களுக்கு அது கூட தெரியாது. நாமே இன்னும் திருக்குறளோட அருமைய தெரிஞ்சிக்கல ..அப்புறம் மத்தவங்க எங்க இருந்து??

அந்த கன்னடர் பதில் சொன்னதே அவங்க ஊர்ல சிலை வச்சனாலதான்.. இல்லேன்னா 'சினிமாவுக்கு பாட்டு எழுதுறவரா இருக்கும்' னு கூட சொல்லி இருப்பாங்க..

என்னதால் நாம தமிழ் மொழி பத்தி பத்தி பத்தியா பேசினாலும், மக்கள் கிட்ட அப்படி ஒன்னும் மொழி மேல மதிப்பு இருக்க மாதிரி தெரியல. இத்தனை காலமும் நம்ம govt. மற்றும் அரசியல் கட்சிகள் தான் (காரணம் என்னவா இருந்தாலும்)கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் தமிழ காப்பாத்தி இருக்கே தவிர, மக்கள் அந்த அளவுக்கு பொறுப்பு எடுத்துகிட்ட மாதிரி தெரியல. மொழி பற்று, மொழி வெறி எல்லாம் தேவை இல்லை... நமக்கென்று இருக்கும் சில தனித்தன்மைகளை மதிக்கதெரிந்தாலே போதும்.

பின்குறிப்பு: மேற்கண்ட பத்தியில் 'தமிழ்' என்பதற்கு பதிலாக 'திருக்குறள்' என்று மாற்றிக்கொள்ளவும் :)

இந்த பதிவை என்னை எழுத தூண்டிய பிரியா அவர்களுக்கு மிக்க நன்றி...அவர் மற்றவர்களுக்கு விளக்கம் கொடுத்ததற்கும்!!!

இதை அவங்களுக்கு கொடுக்குற பதிலாகவோ or அவங்க சொன்னது தப்புன்னு சொல்லவோ எழுதல. அவர்களின் பதிவு என்னை எழுத தூண்டியதின் விளைவே......

உலகை அச்சுறுத்தும் ஸ்வைன் ப்ளூ!!

திடீரெனத் தோன்றி படுவேகத்தில் பரவி பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ளது ஸ்வைன் ப்ளூயென்ஸா எனப்படும் ஸ்வைன் ப்ளூ. இது பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் எனப்படுகிறது. (பன்றிக்கு பிக் தவிர ஹாக்ஸ், ஸ்வைன் என பல பெயர்கள் உண்டு)

ரிபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் ஆர்என்ஏவை (டிஎன்ஏ மாதிரி) தனது ஜெனிட்டிக் மெட்டீரியலாக (ஜீன்) கொண்ட வைரஸ்கள் உருவாக்கும் நோய்கள் தான் இன்ப்ளூயென்சா (Influenza).

இப்போது ஸ்வைன் ப்ளூவைப் பரப்பி வருவது Orthomyxoviridae என்ற ரகத்தைச் சேர்ந்த வைரஸ் (swine influenza virus-SIV). பன்றிகளுக்குள் நுழைந்துவிட்டால் அதன் சுவாசப் பாதையில் வலம் வரும் இந்த வைரஸ் முதலில் பன்றிகளைக் கொல்லும். இந்த வைரசில் பல வகைகள் (strains) உண்டு.

மேலும் ஆர்என்ஏவை அடிப்படையாகக் கொண்ட இந்த நுண்ணுயிர்களுக்கு உருமாறும் (mutate) திறன் உண்டு. பொதுவாக பன்றிகளில் வாழும் ஒரு வைரஸ் மனிதனுக்குள் புகுந்தால் அதை மனிதனின் தற்காப்பு சிஸ்டம் (Immune system) அழித்துவிடும். ஆனால், இந்த மியூட்டேசன் எனப்படும் உருமாறும் திறன் மூலம் மனிதனின் தற்காப்பு சிஸ்டத்தை வென்று விடுகிறது இந்த வைரஸ்.

இதனால் தான் பன்றிகளில் இருந்து மனிதனுக்குள் புகுந்து தாண்டவமாட ஆரம்பித்துள்ளது இந்த வைரஸ். இம்முறை மெக்சிகோவின் பன்றிகள் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து தான் இந்த வைரஸ் மனிதனுக்குள் ஊடுருவியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மெக்சிகோவில் பன்றிகளுக்கு இது எப்படி பரவியது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஆனாலும், ஐரோப்பாவிலிருந்து பறவைகள் மூலம் இந்த வைரஸ் வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும். அங்கு மெக்சிகோவில் பன்றிகளில் புகுந்து உருமாறி மனிதனுக்குப் பரவியிருக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்த வைரசின் ஆர்என்ஏவை சோதனையிட்டதில் வட அமெரிக்க பன்றிகளில் காணப்படும் வைரசில் உள்ள சில ரசாயனங்களும், அதே நேரத்தில் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதிப் பொருட்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் இந்த வைரஸ் ஐரோப்பாவிலிருந்து தான் மெக்சிகோ-வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

மனிதனுக்குள் நுழைந்துவிட்டால் அவர்களது உடலில் பல்கிப் பெருகி சுவாசம் மூலம் அடுத்தவருக்குப் பரவும் திறன் கொண்டது இந்த வைரஸ். இப்போது பரவிக் கொண்டிருக்கும் வைரசுக்கு H1N1 என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இவ்வாறு மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் இந்த பன்றி்க் காய்ச்சல் , பன்றியின் மாமிசத்தை உண்பதால் பரவாது என்கிறார்கள். காரணம், 75 டிகிரி அளவுக்கு மாமிசம் சூடாகும்போதே இந்த வைரஸ் அழி்ந்துவிடும்.

இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இந்த வைரஸை கட்டுப்படுத்த amantadine, rimantadine, Tamiflu (oseltamivir) and Relenza (zanamivir) உள்பட சில மருந்துகள் உள்ளன. ஆனால், முன் கூட்டியே தடுக்கும் வாக்சீன்கள் இல்லை. இந்த மருத்துகளையும் மருத்துவர் [^] ஆலோசனைப்படியே பயனபடுத்த வேண்டும்.

(இதில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிசேசை அளித்தபோது இந்த வைரஸ் amantadine and rimantadine ஆகியவற்றுக்குக் கட்டுப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது)

அதே நேரத்தில் கொஞ்சம் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது, நோய் தாக்கப்பட்டவர்கள் இருந்தால் அங்கு நடமாடும்போது மூக்கையும் வாயையும் மூடும் பில்டர்களை அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, நோய் தாக்குதல் [^] உள்ள பகுதிகளுக்குப் போய்விட்டு வந்தால் வாய், கண், மூக்கில் கைகளை வைப்பதை தவிர்ப்பது, வீட்டில் குப்பை சேராமல் தவிர்ப்பது போன்றவை அதில் சில.

நோய் தாக்கப்பட்டவர் இருமல் வந்தால் துணியை வைத்து வாயை மூடிக் கொண்டு இருமினால் அடுத்தவருக்குப் பரவாது.

இந் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பூசி (வாக்சீன்) கண்டுபிடிக்கும் பணியில் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. ஆனால், அதற்குள் நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய சிக்கலை உலகம் எதி்ர்கொள்ளப் போவது நிச்சயம்.

நன்றி: தட்ஸ்தமிழ்

நான் கடவுள்.... ஏன் கடவுள்???

முன்னுரை:

ஒரு வேண்டுகோள். தயவு செய்து படம் பார்க்கும் முன் இந்த comment ஐ படிக்க வேண்டாம்; நான் செய்த தவறை நீங்களும் செய்ய வேண்டாம். யாருடைய கருத்தையும் முன் வைத்து ரசிக்க வேண்டிய படமல்ல இது. ஒவ்வொருவரும் உணர்ந்து பார்க்கணும்.

பொருளுரை:

பாலாவை பத்தியோ இளையராஜாவை பத்தியோ விமர்சனம் சொல்ற அளவுக்கு என்னாலையும் போக முடியல. ஆனா ஒன்னு மட்டும் புரியுது, அவங்க ரெண்டு பெரும் தாங்கள் மேதைனு புரிய வைக்கிறதுக்காக கஷ்டபடல, அந்த படம் நம்ம ஆன்மா வரைக்கும் புரியணும்னுதான் கஷ்டபட்டுருகாங்க. அந்த கஷ்டத்துக்கு பலன் இருக்கன்னு கேட்டா 'கை மேல பலன் ' னுதான் சொல்லணும். சரி அப்டி என்னதாண்டா புரிஞ்சிகிட்டான்னு எல்லாரும் கேக்குறீங்க ...சொல்றேன்


1. first பாலா இந்த படத்தை சமியருங்களுக்காக எடுக்கல. ஆனா கடவுளை பத்தி நாம இன்னொரு முறை ஆழமா யோசிக்க வைக்கிறாரு.
2. இந்த உலகத்தில் நாம தினம் சந்திக்கிற மக்களோட வாழ்க்கைதான், ஆனா அவங்கள பத்தின நம்ம கவனமும் கண்ணோட்டமும் என்னனு நம்மளையே மறு பரிசீலனை பண்ண வச்சிருக்கார். அப்படிப்பட்ட மக்கள் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டா மட்டும் போதும், மத்தபடி பரிதாபமெல்லாம் படவேண்டாம்னு நேனைச்சிருக்கார்.
3. பாலாவோட இந்த சிந்தனைகள் எல்லாம் நம்ம மூளைக்கு மட்டும் ஏறினா பத்தாது , ஆன்மாவையும் தொடணும் ... இததான் இளையராஜாவும் பண்ணி இருக்கார். அதுல அவருக்கு நிச்சயம் வெற்றிதான்.
4. எத்தனையோ வேதங்கள், மந்திரங்கள் கடவுளை பத்தி இத்தனை வருஷமா பேசினதை, ரொம்ப சாதரணமா பாலா கையாண்டு இருக்கர்னுதான் தோணுது. கடவுளை அதிகமா விமர்சிக்கிறது கூட நம்மளை சிந்திக்க வைக்கத்தான்.
5. இது எல்லா மதத்துக்கும் பொதுவான படம்தான் .பாலா இந்து மதத்தை தேர்வு பண்ணினது easy&effective a சொல்லத்தான்.
6. எல்லாரும் ஆர்யா இன்னும் நல்ல பண்ணி இருக்கலாம்னு சொல்றாங்க. ஆனா எல்லாரும் பார்கனும்கிறதுக்காக நிறைய scenes cut பண்ணிட்டனால ஆர்யாவோட அகோரமான நடிப்பும் சேந்துதான் cut ஆகி இருக்கும்னு நான் நெனைக்கிறேன். மத்தபடி ஆர்யாவோட charactor importance, பாலாவோட எல்லா படம் போல இதிலும் கடைசியாதான் தெரியுது. அது வரைக்கும் அவரோட actions எல்லாம் just demo தான்.
7. பூஜாவை பத்தி சொல்லனும்னா, இனிமே ரொம்ப பேரு பூஜாவை கவனிக்க ஆரம்பிப்பாங்க... award வரும்னெல்லாம் எனக்கு ஆருடம் சொல்ல தெரியாது... ஆனால் படம் பாத்து முடிஞ்சப்புறம் discuss பண்ணும்போதுதான் பூஜா கிற ஒரு நடிகை நடிசிருக்குறதே நெனப்பு வருது.
8. இது ஒரு கொடூரமான படம்னு யாரவது நெனச்சா pls அத மாத்திகோங்க. இளகுன மனசு உள்ளவங்க கட்டாயம் பாக்க வேண்டிய படம். அவங்கதான் உண்மைலேயே feel பண்ணி பாப்பாங்க. நான் ஒன்னும் ரொம்ப soft nature எல்லாம் இல்ல. ஆனா 'என்னடா இப்படி எல்லாம் இருக்கே ' ன்னு நான் feel பண்ணினேன். பெண்கள் நிச்சயமா பாக்கணும்.
9. நாமெல்லாம் ஏதோ நமக்குதான் ரொம்ப problems இருக்குறத நெனச்சிகிட்டு ரொம்ப சலிச்சிகிறோம். படத்தை பாத்தா தன்னம்பிக்கை வராது மட்டுமில்லாம, கடவுள் மேலயும் நம்ம parents மேலயும் ஒரு விதமான நன்றி உணர்ச்சி வரதை தவிர்க்கவே முடியாது
10.இந்த படத்தோட concept 'மரணம்கிறது ஒரு நிகழ்வு மட்டுமல்ல, உணர்வும் கூட'...அதை எப்படி உணர்கிறோம் என்பதுதான். அதாவது மரணகிறதை ஒரு உணர்ச்சியா வச்சி பார்த்தா, அது சந்தோஷமா சோகமாங்கிறது நமக்கு அமைந்த வாழ்க்கையை பொறுத்தது. பெரும்பாலனவுங்க அதன் சோகம்னு நெனச்சாலும், அத சந்தோஷம்னு நினைக்கிற அளவுக்கு கூட மக்கள் மோசமான வாழ்க்கை வாழ்றாங்கன்னு நமக்கு புரியும். சாவை வரம் அல்லது தண்டனையா பெற வேண்டியவர்களுக்கு வரம்/ தண்டனை கொடுக்கிறதின் முக்கியத்துவம் தான் 'நான் கடவுள்'. அதே ஏனோ தானோன்னு சொல்லாம அப்படிப்பட்ட இரண்டு வகை மனிதர்களிலும் ஒவ்வொரு பகுதியினரை தேர்ந்தெடுத்து ரொம்ப அழுத்தமா, கலப்படமா இல்லாம சொல்லி இருக்கார்.

இன்னும் நிறைய இருக்கு... ஆனா இப்போவே screenplay சொல்லிட்ட மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி வந்துடுச்சி. அதனால இதோட எல்லாத்தையும் நிறுத்திக்குறேன்.

முடிவுரை:
நான் படிச்ச சில விமர்சனங்களில் உள்ள குறைகளை படம் பார்த்ததும் நல்லா புரிஞ்சிகிட்டேன். இத படிக்கிற எல்லாரும் தயவு செய்து... படம் பாக்கும்போது இதெல்லாம் மறந்திட்டு open-minded a படம் பாருங்க. அபோதான் உங்க சொந்த கருத்தை உங்களாலேயே உணர முடியும்.